نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4684 | 51 | 9 | يؤفك عنه من أفك |
| | | அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான். |
|
4685 | 51 | 10 | قتل الخراصون |
| | | பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள். |
|
4686 | 51 | 11 | الذين هم في غمرة ساهون |
| | | வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர். |
|
4687 | 51 | 12 | يسألون أيان يوم الدين |
| | | (நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். |
|
4688 | 51 | 13 | يوم هم على النار يفتنون |
| | | நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்). |
|
4689 | 51 | 14 | ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون |
| | | "உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான். |
|
4690 | 51 | 15 | إن المتقين في جنات وعيون |
| | | நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். |
|
4691 | 51 | 16 | آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين |
| | | அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். |
|
4692 | 51 | 17 | كانوا قليلا من الليل ما يهجعون |
| | | அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். |
|
4693 | 51 | 18 | وبالأسحار هم يستغفرون |
| | | அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். |
|