نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
4036 | 38 | 66 | رب السماوات والأرض وما بينهما العزيز الغفار |
| | | "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்." |
|
4037 | 38 | 67 | قل هو نبأ عظيم |
| | | (நபியே?) கூறுவீராக "(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும். |
|
4038 | 38 | 68 | أنتم عنه معرضون |
| | | "நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள். |
|
4039 | 38 | 69 | ما كان لي من علم بالملإ الأعلى إذ يختصمون |
| | | "மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. |
|
4040 | 38 | 70 | إن يوحى إلي إلا أنما أنا نذير مبين |
| | | "நிச்சயமாக நாம் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை. |
|
4041 | 38 | 71 | إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين |
| | | (நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; |
|
4042 | 38 | 72 | فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين |
| | | "நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்" (எனக் கூறியதும்); |
|
4043 | 38 | 73 | فسجد الملائكة كلهم أجمعون |
| | | அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள். |
|
4044 | 38 | 74 | إلا إبليس استكبر وكان من الكافرين |
| | | இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான். |
|
4045 | 38 | 75 | قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين |
| | | "இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான். |
|